search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "நாளை விடுமுறை"

    • ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஆடி 18 ஆம் பெருக்கு விழாவை முன்னிட்டு நாளை விடுமுறை விடப்பட்டுள்ளது
    • விவசாயிகள் யாரும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ள னர்.

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் காய்கறி சந்தைக்கு ஆடி 18 ஆம் தேதி ஆடிப்பெருக்கையொட்டி நாளை (புதன்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டு ள்ளது.

    திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் காந்தி காய்கறி மொத்த விற்பனை சந்தை உள்ளது. இங்கு திண்டுக்கல், தேனி, திருப்பூர், ஈரோடு, கரூர், கோவை மாவட்டங்களைச் சேர்ந்த விவசாயிகள் நாள்தோறும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர்.

    இங்கு விற்பனைக்கு கொண்டு வரப்படும் 60 சதவீத காய்கறிகளை கேரளாவைச் சேர்ந்த வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். இந்நிலையில் நாளை புதன்கிழமை ஆடி 18 ஆம் பெருக்கு விழாவை முன்னிட்டு காய்கறி சந்தைக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

    எனவே விவசாயிகள் யாரும் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வரவேண்டாம் என்று காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர் தெரிவித்துள்ள னர்.

    ×